×

₹20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை வியாபாரிகள் மகிழ்ச்சி கே.வி.குப்பம் வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பு

கே.வி.குப்பம், பிப்.6:கே.வி.குப்பத்தில் நேற்று நடந்த வாரச்சந்தையில் ₹20ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சந்தை வழக்கம்போல் கூடியது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் லோடு வேன் மூலம் கொண்டுவரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வெள்ளாடுகள், கிடாய்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள் என ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டு வரப்பட்டிருந்தது. சந்தையில் சுமார் 350 ஆடுகள் கொண்டுவரப்பட்டு தலா ஒரு ஆடு ₹15 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை, ஆட்டுக்குட்டிகள் ₹3,500 முதல் ₹5ஆயிரம் வரையில் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரங்களில் நடைபெற்ற சந்தைகளில் வியாபாரம் குறைந்திருந்த நிலையில் நேற்று ஆடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. மேலும் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்தது.
தொடர்ந்து வரும் வாரங்களில் ஆடுகள் வியாபாரம் உயர்ந்து காணப்படும் என்றும், இதேபோன்று வரும் வாரங்களில் கூடுதலாக வியாபாரம் நடைபெறும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post ₹20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை வியாபாரிகள் மகிழ்ச்சி கே.வி.குப்பம் வாரச்சந்தையில் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Goat ,KV Kuppa, Vellore district ,Dinakaran ,
× RELATED மனைவி தற்கொலை வழக்கில் அமமுக நிர்வாகி கைது கே.வி.குப்பம் அருகே